சிஷ்யர்கள்

குருவிற்காகவும், கடவுளுக்காகவும்,
உண்மையை உணர்வதற்காகவும்
எத்தனிக்கும் சிஷ்யர்கள்,
அக்காலத்தில் இதற்காக எதனை
வேண்டுமானாலும் தியாகம் செய்ய
தயாராக இருந்தார்கள்.
ஆனால் இன்று, என் சிஷ்யர்கள் அதற்காக
எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
வாழ்க்கையின் அடிப்படை தேவைகள் , ஆடம்பர தேவைகள்
அனைத்தையும் முடித்துவிட்டு வருவார்கள்.
உண்மையை உணர்த்தும் குருவிற்காக
எதனையும் செய்ய தயார் என்று
சொல்ல கூடிய சிஷ்யர்கள் ஒருவரும் இல்லை.
இது நவீன காலத்தின் மிக பரிதாபமான நிலை !
முக்கிய சொந்தங்கள் இறந்து கிடக்கும் போது கூட
சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களேதவிர
ஞானி சுந்தருக்கு அல்ல.
இதனை என்னவென்று சொல்வது!

1 thought on “சிஷ்யர்கள்

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *