இன்று நான் குருவின் இல்லத்திற்கு சென்றிருந்தேன் , அங்கு சென்றதும் மகான்கள், மற்றும் குருவின் படத்தை பார்த்து வேண்டி விட்டு தியானத்தில் அமர்ந்தேன் .இன்று நான் தியானத்தில் மிகவும் உள்ளே செல்வதை என்னால் உணர முடிந்தது. எண்ணங்கள் அடங்கிச் செல்லும் போது ஓரு இருளான, அமைதியான உலகிற்குள் செல்வதை போல் உணர்ந்தேன் .(dark and peaceful world) . பின்பு ஒரு பத்து நிமிடங்களுக்கு பிறகு தொடர்ந்து அவ்வாறே இருந்தது. அந்த இருளான அமைதியான உலகத்தில் தொடர்ந்து இருந்தேன். நான் தொடர்ந்து அவ்வாறு இருந்தது குருவின் தரிசனத்தை கண்ட பிறகே ஆகும்.நான் தியானம் செய்து கொண்டிருந்த போது குரு அங்கு வந்திருந்தார் .குருவின் தரிசனத்தை கண்ட பிறகு நான் மீன்டும் தியானத்தில் அமரந்த பிறகு தான் அவ்வாறு தொடர்ந்தது. அதை குருவின் அசிர்வாதமாகவே உணர்ந்தேன்.
Om guruji sundara murthy swamigale namaha