மகான் ஸ்ரீ குருலிங்க சுவாமிகள் – Guruji Sundar

ஆன்ம பாதையில் மழலையாக வந்த என்னை இளைஞனாக மாற்றி என்னை முழுமை என்னும் பாதைக்கு அழைத்து செல்லும் தந்தையே, நான் தெரியாமல் பல தவறுகள் செய்தாலும், அகம்பாவம் என்னும் மமதையில் அலைந்து திரிந்தாலும், உடனுக்குடன் என் மமதையை அடக்கி நான் என்ற செருக்கையும் களைந்து உன் காலடியில் விழ வைத்த அருமை தந்தையே !! நான் எங்கு சென்றாலும், என்னை நிழல் போல தொடர்ந்து என்னையும் என் சுற்றத்தையும் காத்து அரவணைக்கும் தந்தையே !!

நான் எனதருமை தந்தையை இழந்த போது, மாயை என்ற திரையை விலக்கி காட்டி, என்னை ஒரு துளி கூட, கண் கலங்காமல், என் தந்தையை கரை சேர்க்க வைத்த அருட் தந்தையே, நான் தெரிந்தும், தெரியாமலும், யாருக்கும் ஒரு தவறையும் இழைக்காமல், என்னை காப்பாயாக.

எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் ஒரு தீங்கையும் இழைக்காமல் என்னை காப்பீர்களாக!!!

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *